வெளியே வந்தால்
உள்ளே செல்லமுடியாது, கருவறை!
உள்ளே சென்றால்
வெளியே வரமுடியாது, கல்லறை!
இருக்கட்டும்,
காதலி!
உன் இதயம் கருவறையா
இல்லை கல்லறையா?
சொல்லிவிடு பைங்கிளி!!
-சத்யா-
Friday, December 12, 2008
Thursday, December 11, 2008
தாரகை!!
கார்முகில்,
கன்னி இவள் வண்ணம்!
பொன்னகை,
பூவை இவள் புன்னகை!
கோவைப்பழம்,
கோதை இவள் கோபம்!
தோகைமயில்,
தாரகை இவள் தளிர்நடை!
நீள்வானம்
நங்கை இவள் நட்பு!
-சத்யா-
கன்னி இவள் வண்ணம்!
பொன்னகை,
பூவை இவள் புன்னகை!
கோவைப்பழம்,
கோதை இவள் கோபம்!
தோகைமயில்,
தாரகை இவள் தளிர்நடை!
நீள்வானம்
நங்கை இவள் நட்பு!
-சத்யா-
தோழியே! துயில் கொள்!
தோழியே! துயில் கொள்!
நீள்வானக் கூரையின்கீழ்,
நட்சத்திரப் பந்தலில்,
வெண்ணிலா துணையிருக்க,
தென்றல் தாலாட்ட,
மலர்கள் மணம் பரப்ப,
மங்கையே! துயில் கொள்!!
- சத்யா-
நீள்வானக் கூரையின்கீழ்,
நட்சத்திரப் பந்தலில்,
வெண்ணிலா துணையிருக்க,
தென்றல் தாலாட்ட,
மலர்கள் மணம் பரப்ப,
மங்கையே! துயில் கொள்!!
- சத்யா-
Subscribe to:
Posts (Atom)
