ஆக்க முடியாதது ஆற்றல் !
அழிக்க முடியாதது ஆற்றல் !
ஆனால்சேமிக்கக் கூடியது ஆற்றல் !
ஞாயிறு ஒளியில் ஒளிந்திருப்பது மின்சக்தி !
அதன் பயன்பாட்டில் இருக்குது நம் யுக்தி !
நீர்வரத்தில் நிரம்பிக் கிடக்குது நீர்சக்தி !
நிலக்கரியில் நிறைந்து இருக்குது எரிசக்தி !
தீப்பொறியில் திளைத்து இருப்பது ஒளிசக்தி !
தென்றலில் தவழ்ந்து கிடப்பது வாயுசக்தி !
அணுவில் அளாவியிருப்பது அணுசக்தி ! இப்படி
பஞ்சபூதங்களில் பரவிக்கிடப்பது சக்தி,
அதற்கு பஞ்சம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் மனிதசக்தி !!
நண்பா !
மனிதவளம் மேம்பட, பூமியில்
இயற்கைவளம் அழித்திடல் நியாயமோ ??
உன் காந்த சக்தியால்
பசுமை இழையாமல்
புவியில் ஈர்த்திடு அனைத்து சக்தியை !
பார்வளம் போற்றிட பாரதம் செழித்திட
இன்றே விழ்த்திடு ! ஆம்
"ஆற்றல்" மண்ணில்
"சேமிப்பு" விதையை விதைத்திடு !
ஆற்றல் சேமிப்பில் காட்டிடு "தீவிரவாதம்" ! சேமித்த
ஆற்றலால் ஒழித்திடு தீவிரவாதம் !!
ஆற்றல் மண் செழிக்கும்,
சேமிப்பு விதை விருட்சமாகும் !
நம் வாழ்வு வளம் பெறும் !
நாளைய சமுதாயம் நலம் பெறும் !
-என் கற்பனாசக்தியில் கனிந்த கவிதை-
சத்யா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment