Sunday, August 23, 2009

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

ஆனை வடிவினில் எமை
ஆட்கொள்ளும் ஐந்து கரத்தானே!

கணப்பொழுதில் கவலைகள்
களையும் கண‌நாதனே! கணேசனே!!

நம்பிக்கையுடன் நாடுவோருக்கு
நனமை நல்கும் தும்பிக்கையானே!

களிமண்ணுக்கும் "களி" தீர்த்த‌
கலியுக நாயகனே!

தந்தம் ஒடித்து
பாரதம் தந்த பிரணவ வடிவே!

சதுர்த்தி நாளில் தொழுவோர்க்கு
சங்கடம் தீர்க்கும் ஷண்முகன் சகோதரனே!

உம் தாழ் பணிகின்றோம்
எமைக் காத்தருளும் உமை மைந்தனே!
-சத்யா‍-

No comments: