பிறந்தநாள் காணும் தோழியே!
பூக்கள் மலர்ந்தது
உன் புன்னகை பார்த்து!
நிலவு ஒளிர்ந்தது
உன் முகம் பார்த்து!
கவிதைகள் கனிந்தது
உன் குரல் கேட்டு!
நட்பு புலர்ந்தது
நம்மைப் பார்த்து!
நம் முகம் பார்த்து
எட்டுத் திங்கள் ஆனபோதும்
அலைபேசி மூலம் நம் எண்ண அலைகள்
எட்டுத் திக்கும் ஆளும்!
சில உறவுகள் புன்னகை போல
என்றாவது தான் உடன் இருக்கும்!
சில உறவுகள் மூச்சைப் போல
எபபவும் உடன் இருக்கும்
நம் நட்பைப் போல!!
உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!
- நட்புடன், சத்யா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment