Thursday, August 19, 2010

முதல்வன் முருகன்!!


அழகெனும் சொல்லுக்கு
அகர‌மாய் விளங்கும் சிங்காரவேல‌‌னே!

செம்மொழியாம் செந்தமிழுக்கு
அடைமொழியாம் உமை மைந்தனே!

அப்பனுக்கும் பாடம் சொன்ன‌
வேழ‌முகத்தான் சோதரனே!

வள்ளித் தெய்வானை மணாள‌னே!
அல்லல் போக்கும் அருளாளனே!

பிரணவத்தின் அரணாம் மணிய‌னே!
அரவத்தையும் ஆட்கொள்ளும் சண்முகனே!

குன்றத்தில் குடிகொண்ட குறிஞ்சி நாயகனே!
செந்தூரில் நின்றருளும் செந்தில்நாதனே!

பழநிப்பதி வாழ் பாலகுமர‌னே!
(சுவாமி)மலைதனில் வாசம்செயும் சுவாமிநாதனே!

தணிகையில் திகழும் தணிகாசலனே!
சோலைமலையில் சோதிமயமான வேலவனே!

மருதத்தில் மணம்பரப்பும் மாமணியே! என்றும்
இருதயத்தில் இத(ட)ம‌ளிப்பாய் மால்மருக‌னே!

-‍‍சத்யா-

No comments: